Thursday, July 23, 2009

இரவின் முடிவில்

நெறிமுறைகள் கடந்து
உன் குறி துளைக்க
விளையும் மனதின்
தூரம் குலைகிறது
இலக்கில் கவனம்
குவித்தால் பறவை
வீழும் என்ற உபதேசம்
அர்ஜுனனுக்கு மட்டுமா?
இங்கு நாண் ஏற்ற
அங்கு நீ நாணும் அலை
என்னை அடைகிறது
பறவையின் முனகலில்
தளர்ந்தது வில்
அறிவுரைக்க அருகில்
இல்லை ஒரு சாரதி !!!

No comments:

Post a Comment