Tuesday, July 28, 2009

நாடு கடந்தவன்

என் தேகம் உன் தேசம் ஆனதால்
எனக்கு பிடித்தது உனக்கும் பிடிக்கும்
ஆனால் தேசம் வராத உன்னை
காலம் நாடு கடத்தியதோ
இல்லை நாடாமல்
நீயே கடந்து விட்டாயோ

Monday, July 27, 2009

இன்னொரு முயற்சி

நீ பெண் என்பதை
ஒத்து கொள்கிறேன்
ஆம்...
உனது கதவுகளை திறக்கும்
சாவி என்னிடம் உள்ளதால்...
உன் பிரேமை என்னை
யாசித்தால் பூட்டுகளிடம்
சாவிகள் நீண்ட நேரம்
காத்திரா என்று சொல்...
பூ அறியாது பூவை திற என்கிறாய்
தேன் திருடிய
போதையில் என் சிறகுகள்
உனக்கு கூறிவிட்டனவே
நீ சூறையாடப்பட்டதை...

Thursday, July 23, 2009

இரவின் முடிவில்

நெறிமுறைகள் கடந்து
உன் குறி துளைக்க
விளையும் மனதின்
தூரம் குலைகிறது
இலக்கில் கவனம்
குவித்தால் பறவை
வீழும் என்ற உபதேசம்
அர்ஜுனனுக்கு மட்டுமா?
இங்கு நாண் ஏற்ற
அங்கு நீ நாணும் அலை
என்னை அடைகிறது
பறவையின் முனகலில்
தளர்ந்தது வில்
அறிவுரைக்க அருகில்
இல்லை ஒரு சாரதி !!!