என் தேகம் உன் தேசம் ஆனதால்
எனக்கு பிடித்தது உனக்கும் பிடிக்கும்
ஆனால் தேசம் வராத உன்னை
காலம் நாடு கடத்தியதோ
இல்லை நாடாமல்
நீயே கடந்து விட்டாயோ
Tuesday, July 28, 2009
Monday, July 27, 2009
இன்னொரு முயற்சி
நீ பெண் என்பதை
ஒத்து கொள்கிறேன்
ஆம்...
உனது கதவுகளை திறக்கும்
சாவி என்னிடம் உள்ளதால்...
உன் பிரேமை என்னை
யாசித்தால் பூட்டுகளிடம்
சாவிகள் நீண்ட நேரம்
காத்திரா என்று சொல்...
பூ அறியாது பூவை திற என்கிறாய்
தேன் திருடிய
போதையில் என் சிறகுகள்
உனக்கு கூறிவிட்டனவே
நீ சூறையாடப்பட்டதை...
ஒத்து கொள்கிறேன்
ஆம்...
உனது கதவுகளை திறக்கும்
சாவி என்னிடம் உள்ளதால்...
உன் பிரேமை என்னை
யாசித்தால் பூட்டுகளிடம்
சாவிகள் நீண்ட நேரம்
காத்திரா என்று சொல்...
பூ அறியாது பூவை திற என்கிறாய்
தேன் திருடிய
போதையில் என் சிறகுகள்
உனக்கு கூறிவிட்டனவே
நீ சூறையாடப்பட்டதை...
Thursday, July 23, 2009
இரவின் முடிவில்
நெறிமுறைகள் கடந்து
உன் குறி துளைக்க
விளையும் மனதின்
தூரம் குலைகிறது
இலக்கில் கவனம்
குவித்தால் பறவை
வீழும் என்ற உபதேசம்
அர்ஜுனனுக்கு மட்டுமா?
இங்கு நாண் ஏற்ற
அங்கு நீ நாணும் அலை
என்னை அடைகிறது
பறவையின் முனகலில்
தளர்ந்தது வில்
அறிவுரைக்க அருகில்
இல்லை ஒரு சாரதி !!!
உன் குறி துளைக்க
விளையும் மனதின்
தூரம் குலைகிறது
இலக்கில் கவனம்
குவித்தால் பறவை
வீழும் என்ற உபதேசம்
அர்ஜுனனுக்கு மட்டுமா?
இங்கு நாண் ஏற்ற
அங்கு நீ நாணும் அலை
என்னை அடைகிறது
பறவையின் முனகலில்
தளர்ந்தது வில்
அறிவுரைக்க அருகில்
இல்லை ஒரு சாரதி !!!
Subscribe to:
Comments (Atom)
